search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன கருவி"

    • 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம்
    • நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்கள்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது.

    ரூ.54 லட்சத்தில் நவீன கருவிஇங்கு அறுவை அரங்குகள் மற்றும் சிறப்பு துறைகளான இருதயவியல்துறை, சிறுநீரகவியல் துறை, டயலிசிஸ் பகுதி, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற பகுதிகளில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை பிரிவை மேம்படுத்த மத்திய நுண்கிருமி நீக்கும் பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்மா ஸ்டெரிலைசர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது.

    இந்த கருவி மூலம் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யும் கருவியின் உதிரி பாகங்கள், ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவிகள், மயக்கவியல் துறை கருவிகள், மற்றும் நவீன அறுவை சிகிச்சை கருவிகளான எண்டாஸ் கோப்பி, லேப்பராஸ் கோப்பி கேமராக்கள், வெண்டிலேட்டர் உதிரி பாகங்கள் போன்ற கருவிகளை 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் சுத்தப்படுத்தலாம். அதாவது, ஹைட்ரஜன் பொராக்சைடு மற்றும் பிளாஸ்மா தொழில் நுட்பத்தில் கிருமிகளை நீக்கம் செய்து மறுபடியும் பயன்படுத்த முடியும்.

    பொதுவாக இந்தகருவி கார்ப்பரேட் மருத்துவமனையில் மட்டும்தான் நிறுவப்பட்டிருக்கும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தமிழ்நாட்டில் சென்னைக்கு பிறகு கன்னியாகுமரி மருத்துவமனையில் தான் தற்போது நிறுவப்படுள்ளது.

    மேலும் இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் கருவிகளை கிருமி நீக்கம் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 3 நவீன ஆட்டோ கிளைவ் எயந்திரங்களையும், நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 2 சலவை எந்திரங்களையும் வாங்கி வழங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கருவி நிறுவும் நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயாஸ், கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர்டு ஜான்சன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர்.
    • நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பலரும் தெருநாய்களால் கடிக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.

    இதுபோல அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன.

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவன் ஆண்டோ ஜாய் மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர் தெருநாய்களை துரத்த என்ன செய்யலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    இதன் பலனாக நாயை துரத்தும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக தங்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் துணையுடன் அவர்கள் 45 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர். இந்த கருவியில் இருந்து எழும் அல்ட்ரா சவுண்ட்டை கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர். இதனை பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். அதில் நல்ல பலன் கிடைத்தது.

    இந்த கருவியை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புத்தக பையில் இணைத்து கொள்ளலாம். நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    இந்த கருவியை தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் வெளியிட மாணவர்கள் ஆண்டோ மற்றும் பிரார்த்தனா முடிவு செய்தனர். இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ×